விக்கிரவாண்டி, ஆக. 14: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மாத்திரை வாங்க வந்து வரிசையில் நின்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு டாக்டரிடம் தூக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் இறந்தவர் யார் என்று தெரியாததால் அங்கிருந்தவர்கள் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.