திண்டிவனம், ஆக. 14: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது முருக்கேரி ஏரி. இது அப்பகுதியில் விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் அவ்வழியாக வயலுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கும் அப்பகுதியில் ஒட்டி செல்ல முடியாத நிலை உள்ளது. விரைவில் மழை காலம் தொடங்க உள்ளதால், கோழி கழிவுகள் அனைத்தும் ஏரி தண்ணீரில் கலக்கும் அபாயம் உள்ளது.