மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, ஆக. 14: எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எறையூர் கிராமத்தில் டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஜோசப் செல்வக்குமார்(28) என்பவரை கைது செய்து அவருடைய டயர் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டயர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Related Stories: