நெல்லை, ஆக. 14: தலைவன்கோட்டை அருகே கொல்லியாற்றில் பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 கிராமங்களில் குடிநீர் கிடைக்காததால் மக்கள் தவிக்கின்றனர். வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைவன்கோட்டையில் கொல்லியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தலைவன்கோட்டை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பூஜைபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், கொல்லி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார்.