சென்னை: பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் சென்றபோது கார் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் இறந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆவடி பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (23). இவருக்கு நேற்று பிறந்தநாள். இதை நண்பர்களுடன் சேர்ந்து புதுச்சேரியில் கொண்டாட முடிவு செய்தார். இதையடுத்து ராஜ்குமார் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சூர்யா (22), சரத் (24), பிரான்சிஸ் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் சென்றபோது எதிரே சென்னை நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் திடீரென கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மேதியது. இதனால் கார் சாலையோரத்தில் கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த ராஜ்குமார், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தனர். சரத், பிரான்சிஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.