நீடாமங்கலம்,ஆக.14: நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு 945டன் சன்னரக நெல் மூட்டைகள் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன் களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும் ,அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று மன்னார்குடி,நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ஆதனூர், மூவாநல்லூர், தலையாமங்கலம், எடையர்நத்தம்,தெற்கு நத்தம் பகுதிகளில் இருந்து 75 லாரிகளில் 945 டன் சன்ன ரக அரிசி மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து 21 வேகன்களில் சென்னை வடக்கு மண்டலத்திற்கு அரவைக்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.