×

விண்ணப்பிக்க அழைப்பு மேட்டூரில் தண்ணீர் திறப்பு ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வார கோரிக்கை

திருத்துறைப்பூண்டி ஆக.14: மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகள், வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநிலவிவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:மேட்டூர் தண்ணி திறந்தாச்சி ஆனால் கஜா புயலில் சாய்ந்தமரங்கள் ஆறுகளிலும் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களிலும் 8 மாதம் ஆகியும் அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடக்கின்றது. ஆறுகளில் தண்ணீர் வருவதற்குள் அகற்ற பொதுப்பணித்துறை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலில் விழுந்த மின்கம்பங்கள்வயலில் கிடக்கின்றது இதனைஅகற்றமின்சார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தெரிவித்து  ள்ளார்


Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்