×

சீர்காழியில் புதிய கல்வி கொள்கையை விளக்கி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

சீர்காழி, ஆக.14:சீர்காழியில் புதிய கல்வி கொள்கையை விளக்கி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதிய கல்வி கொள்கையை விளக்கி சீர்காழி அருகேயுள்ள விவேகானந்தா, பெஸ்ட் மற்றும் பூம்புகார் கல்லூரி, புத்தூர் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான புத்தகங்களை வழங்கினர்.தேசிய கல்வி கொள்கை வரைவு என்ற பெயரில் கல்வியை பறிக்கும் செயல் உள்ளது. 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் 15 வருடம் பயின்று மேல்நிலைப்பள்ளியில் கல்வி சான்று பெற்றாளும் கல்லூரியில் சேர தகுதியாக கருதப்படமாட்டார்கள். தேசிய தேர்வு முகமை தேர்வில் தேர்ச்சி பெற்றாள்தான் கல்லுரியில் சேரமுடியும்.

தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் போன்று பி.ஏ., பி.எஸ்சி போன்ற படிப்புகளுக்கு தேர்வு எழுதவேண்டும். 6 வயதிலிருந்து மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்கப்பட வேண்டும். கல்வியியல் கல்லூரிகள் மூடப்பட்டு பல்கலை கழகங்களில் நான்கு வருடம் படித்தால் தான் ஆசிரியராக சேர முடியும். பள்ளி முதல் கல்லூரி வரை சந்தையில் போட்டிப்போட்டு தரத்தை நிரூபிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பின்பற்றும் 69 சதவீதம் இடஒதுக்கீடு பின்பற்றுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. சமஸ்கிறுதம் கற்றளுக்கு கூடுதல் முக்கியத்துவம் பிற இந்திய மொழி வளர்ச்சிக்கு வாய்ப்புகள் கிடையாது. இந்திய அரசியல் சட்டம் உத்திரவாதம் படுத்தியுள்ள மாநில அரசு உரிமைகள் முக்கியமாக பிரிக்கப்பட்டு பிரதமர் தலைமையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தேசிய கல்வி ஆணையமே முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக இருக்கும்.மேற்கண்ட செய்திகள் அடங்கிய புத்தகங்களை தந்தை பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்ட செயளாலர் சீர்காழி பெரியார் செல்வம் தலைமையில் சீர்காழி நகர தலைவர் மனோஜ் மற்றும் தமிழரசன், பிரவின், தினேஷ் உள்ளிட்டவர்கள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...