×

லேசான மழைக்கே சகதியான சாலை போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

ராஜபாளையம், ஆக.11: ராஜபாளையம் அருகே, அமையப்பபுரம் செல்லும் சாலை லேசான மழைக்கே சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.  ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் இருந்து  அம்மையப்பபுரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. இந்நிலையில், தற்போது பெய்த லேசான மழைக்கே சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே, அம்மையப்புரத்துக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை