பொள்ளாச்சி, ஆக. 11: பொள்ளாச்சி நகரில், குடியிருப்புகளில் மழைநீர் புகுவதை தடுக்க, பிரதான சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேரும் கழிவுநீர், ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணாகுளத்தில் கலக்கிறது. நகர எல்லையில் ஒரு பகுதியான பொட்டுமேட்டில் இருந்து ஆரம்பிக்கும் கழிவுநீர் சாக்கடை மரப்பேட்டைவீதி, நேருநகர், கண்ணப்பன்நகர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி பாலத்தை கடந்து கிருஷ்ணாகுளத்தை சென்றடைகிறது. நகர் பகுதியிலிருந்து கழிவுநீர் செல்ல வசதியாக பெரிய அளவில் உள்ள இந்த சாக்கடை பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமலும், ஆழப்படுத்தாமல் இருப்பதால், அதில் நாளுக்குநாள் கழிவு பொருட்கள் தேங்கி துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாக்கடையில் ஆங்காகே தூர்வாரும் பணி நடைபெற்றிருந்தாலும், அப்பணி நாள்போக்கில் கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.