மழையால் வெற்றிலை வரத்து குறைவு

ஒருகட்டு ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை

பொள்ளாச்சி, ஆக.11: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று, மழையால் வெற்றிலை வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் ஒருகட்டு ரூ.4ஆயிரம் வரை விற்பனையானது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று வெற்றிலை ஏலம் நடந்தது. இதில் சுற்றவட்டார பகுதியயை சேர்ந்த விவசாயிகள் 25க்கும் குறைவான வெற்றிலை கட்டுகளே கொண்டுவந்தனர். வெற்றிலை வரத்து மிகவும் குறைவால், அதனை வியாபாரிகள் கூடுதல் விலை நிர்ணயித்த, ஒருகட்டு ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.4ஆயிரம் வரை ஏலம் மூலம் வாங்கி சென்றனர். இதனால் குறிப்பிட்ட சில நிமிடத்தில் அனைத்து வெற்றிலை கட்டுகளும் விற்பனையானது.

Related Stories: