×

திருத்தணியில் சூறைக்காற்றுடன் மழை மரங்கள் சாய்ந்தன

திருத்தணி, ஆக. 11: திருத்தணி பகுதியில் கடந்த சில வாரங்களாக திடீர் திடீரென மாலை மற்றும் இரவு நேரத்தில் அவ்வப்போது சிறிது நேரம் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென சூறைக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர், ஊழியர்களை கொண்டு வேரோடு சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...