திருச்சி, ஆக.11: திருச்சி மாநகராட்சி 4 கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் 181 மனுதாரர்களுக்கு உடனடி உத்தரவுகள் வழங்கப்பட்டது.திருச்சி மாநகராட்சியில் ரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோஅபிசேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களுக்கு குறைதீர் சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் ரங்கத்தில் 19, அரியமங்கலத்தில் 33, பொன்மலையில் 87 மற்றும் கோஅபிசேகபுரம் கோட்டத்தில் 90 என மொத்தம் 229 மனுக்கள் மாநகராட்சி அலுவலர்களை கொண்டு பெறப்பட்டது. பொன்மலை கோட்ட அலுவலகத்தில் நடந்த முகாமில் மனுதாரர்களுக்கு உடனடி உத்தரவுகளை ஆணையர் ரவிச்சந்திரன் வழங்கினார்.