மெஞ்ஞானபுரத்தில் முதியவர் மீது தாக்குதல்

உடன்குடி, ஆக. 11: மெஞ்ஞானபுரத்தில் முதியவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெஞ்ஞானபுரம் பாக்யாநகரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (70). இவர் தனது மகன் ஜெயக்குமார்  ராஜ், மருமகள் எமி பராமரிப்பில் இருந்து வருகிறார். இருப்பினும் தன்னை மகன்  சரியாக கவனிக்கவில்லை எனக்கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே மகனும், மருமகளும் தன்னை தாக்கியதாகக் கூறி ஆறுமுகநயினார்   திருச்செந்தூர அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்  பதிந்து மகன், மருமகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: