அரசு பெண்கள் கல்லூரியில் பேரவை தொடக்க விழா

கும்பகோணம், ஆக. 11: கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பேரவை தொடக்க விழா நடந்தது. தமிழ்த்துறை தலைவர் அகிலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிந்தியாசெல்வி தலைமை வகித்தார். திருவண்ணாமலை பவா செல்லத்துரை சிறப்புரையாற்றினார். இதைதொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றவர்கள், கல்லூரி வளர்ச்சிக்கு பாடுபடுவது, மாணவிகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பது, பிளாஸ்டிக் இல்லாத கல்லூரியாக மாற்றுவது, ராகிங் செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். பேரவை செயலாளர் கிருத்திகா நன்றி கூறினார்.

Related Stories: