திருவையாறு, ஆக. 11: திருவையாறு அடுத்த அரசூரை சேர்ந்த மதியழகன் மகள் சுமத்திரா (24). இவர் முதுகலை பட்டதாரி. இந்நிலையில் கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் சுமத்திராவின் தாய் ராஜாம்மாள் (45) புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிந்து சுமத்ராவை தேடி வருகின்றனர்.