×

தனியார் பள்ளியில் போலீஸ்காரர் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு

சென்னை, ஆக. 8: திருவொற்றியூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பெட்டிகளுக்கு (இவிஎம்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் நசீர் முகமது என்பவர் நேற்று தனது துப்பாக்கியை சுத்தம் செய்தார்.
அப்போது துப்பாக்கி லோடில் இருந்தது தெரியாமல் தவறுதலாக துப்பாக்கியின் டிகர் கார்டில் கை வைத்து அழுத்தியதில் துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா வெடித்து சிதறியது. இது பாதுகாப்பு அறையில் மேல் தளத்தில் பாய்ந்ததில் மேல் தளத்தில் ஓட்டை விழுந்தது. இதுதொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...