×

தீ பிடித்த வானம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு



சிவகங்கை, ஜூலை 24: காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் கண்மாய் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.மறவமங்கலம் கிராம விவசாயிகள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மறவமங்கலம் நாச்சியாரேந்தல் சூரங்குண்டு கண்மாய் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன பகுதியாக உள்ளன. இங்கு ஆழ்துளை கிணறு போடப்பட்டு குடிநீர் எடுக்கப்படுகிறது. இரண்டு குடிநீர் கிணறு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த கண்மாய்க்கான வரத்து கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. கால்வாய் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே கண்மாய் மூலம் விவசாய நிலங்கள், குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் முழுமையாக அகற்ற வேண்டும். கால்வாயை தூர்வாரி மீண்டும் நீர் வரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்