இளையான்குடி, ஜூலை 24: இளையான்குடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை எஸ்பி கைது செய்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சூராணத்திலுள்ள சர்ச் முன்பு 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அவரை 16 வயது சிறுவன் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரத்த காயங்களுடன் வீடு திரும்பிய சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்பி ரோஹித் நாதன் நேரடியாக விசாரணை செய்து போக்சோ உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.