×

அலறி ஓடும் மக்கள் மூதாட்டியிடம் செயின் பறிப்பு


சிங்கம்புணரி, ஜூலை 24: சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிக்கப்பட்டுள்ளது.சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மாரியம்மாள் (65). இவர் நேற்று மதுரை மாவட்டம் பாண்டாங்குடியிலிருந்து வேட்டையன்பட்டிக்கு பஸ்சில் வந்து இறங்கியுள்ளார். அங்கு இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் மாரியம்மாள் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து மாரியம்மாள் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்