ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் இசிஇ துறையின் வழிகாட்டுதல் முகாம்

சேலம், ஜூலை 24: ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் இசிஇ துறையின் சார்பில், வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்து, முகாமினை தொடங்கி வதை்தார். ஹார்ட் ஃபுல்னஸ் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எப்படி மரியாதை செலுத்துவது, எதிர்பார்ப்புகள் இல்லாமல் உதவுவது, தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது குறித்து விளக்கினார். கல்லூரியின் துணை முதல்வர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் பயிற்சி இயக்குநர் பேராசிரயிர் ஜெஃப்ரி டேவிட்சன் வாழ்த்தி பேசினர். இசிஇ துறையின் தலைவி பேராசிரியை ரம்யா வரவேற்றார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: