ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் ஆலோசனை கூட்டம்

ஆத்தூர், ஜூலை 24: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்படும் டெண்டருக்கான அனைத்து ஆவணங்களிலும் அதிகாரிகளின் கையொப்பம் இருந்தால் மட்டுமே ஒப்பந்த டெண்டரில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஊராட்சி உபரிநிதியில் நடைபெற்ற ஒப்பந்த பணிகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கிட வேண்டும். 14வது நிதிக்குழு மானியக்குழு வேலைகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் டெண்டர் வைக்க மாவட்ட திட்ட அலுவலரை சந்திப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பொருளாளர் பச்சமுத்து, செயலாளர் அன்பழகன் உட்பட அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: