×

கிணற்றில் சிக்கிய எலக்ட்ரீசியன் மீட்பு

காரிமங்கலம், ஜூலை 24: காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சி செல்லியம்மன் கோயில்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில், மின் மோட்டார் பழுதடைந்தது. இதை சரிசெய்ய நேற்று நாகனம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன்(47), 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பைப்பை பிடித்து உள்ளே இறங்கியுள்ளார். மின்மோட்டரை சரிசெய்த சரவணன், மீண்டும் மேலே ஏறிவர முயற்சித்த போது முடியவில்லை. இதுகுறித்து கோபால், பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றினுள் இருந்த சரவணனை பத்திரமாக மீட்டனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்