×

பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு அஞ்சலி கூட்டம்

தர்மபுரி, ஜூலை 24:  தர்மபுரி மாவட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பேரவையின் சார்பில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு அஞ்சலி கூட்டம் அமைப்பாளர் விசுவநாதன் தலைமையில் நடந்தது. அமைப்புக்குழு உறுப்பினர்கள் சமதர்மம், கிருஷ்ணன், தங்கராஜ், முருகேசன், ராஜாமணி, பெருமாள், சஞ்சீவன், மகாலிங்கம், ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தியாகி சுப்பிரமணிய சிவாவின் நீண்ட கால கனவான, பாரதமாதா கோயில் கட்டும் பணியை விரைவு படுத்த வேண்டும். இந்த கட்டிடத்தில் அவரது வரலாற்று நினைவு பொருட்கள், கடிதம், புகைப்படங்கள், அவர் எழுதிய நூல்கள், அவர் நடத்திய பத்திரிக்கைகளின் பிரதிகள், அவர் எழுதிய நாடக நூல்கள் உள்ளிட்ட இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை, நினைவு கூறும் அம்சங்கள் இடம்பெற வகையில் இங்கு அருங்காட்சியமாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, தியாகி சுப்பிரமணிய சிவாவின் 94வது நினைவு நாளை முன்னிட்டு, பாப்பாரப்பட்டியில் உள்ள சிவா மணிமண்டபத்தில், அவரது நினைவிடத்தில் தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவையின் சார்பில், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா