×

உணவக சுகாதார மதிப்பீட்டு ஆய்வு விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 24: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவக சுகாதார மதிப்பீட்டு ஆய்வு குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.இதில் மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமை வகித்து பேசுகையில், இனிவரும் காலங்களில் உணவககங்கள் உணவு பாதுகாப்பு துறை சார்பாகவும் மற்றும் தாங்களே சுயமதிப்பீடு செய்து கொண்டும் உணவகங்களை சுயமதிப்பீடு செய்து உணவு பாதுகாப்பு தர ஆணையம் மூலமாக உணவு உண்பதற்கு பொறுப்பான மற்றும் பாதுகாப்பான இடம் என்று மதிப்பீடு செய்து, அச்சான்றிதழினை பெற்று உணவகங்களில் காட்சிப்படுத்த வேண்டும்என்றார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா