×

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

மணமேல்குடி, ஜூலை 24: மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக ஜல் சக்தி அபியான் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திவுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் மணமேல்குடி ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தாங்கி துவக்கி வைத்தார்.ஊர்வலம் மணமேல்குடி கடைவீதி வழியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர் நிலைகளை பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல், நிலத்தடி நீரை பெருக்குதல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி சென்றனர். இந்த ஊர்வலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், ஊராட்சி செயலர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...