×

கறம்பக்குடி அருகே மர அறுவை மில் தீப்பிடித்து சேதம்

கறம்பக்குடி, ஜூலை 24: கறம்பக்குடி அருகே மர அறுவை மில் தீயில் கருகி சேதமானது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கேகே பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு சொந்தமான மர அறுவை மில் ரெகுணாதபுரம் புது விடுதி கடைவீதியில் உள்ளது. இந்த மர அறுவை மில்லில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திலும், கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சிங்க முத்து தலைமையில் விரைந்து சென்று மர மில்லில் தீ முழுவதும் எரிந்து சேதம் ஏற்படுவதற்கு முன்பு தீயை அனைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாகவா அல்லது ஏதேனும் புகை பொருள் மூலமாக தீப்பிடித்து எரிந்து சேதம் ஆனதா என ரெகுணாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  மர அறுவை மில்லில் எரிந்து சேதம் ஆனதன் மதிப்பு ரூ.10ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்