×

பொன்னமரவாதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பொன்னமராவதி, ஜூலை 24: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் என்பவரை பணி ஒய்வு பெறும் நாளில் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை அனைத்து நிலை அலுவலர்களும் ேநற்று ஒரு நாள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...