×

பயிற்சி முகாமில் தகவல் மன்னார்குடி அருகே கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்க பேரணி

மன்னார்குடி, ஜூலை. 24: மன்னார்குடி அருகே கூப்பாச்சிக் கோட்டை கிளை நூலகத்தில் வாசிப்பு முகாம் மற்றும் வாசிப்பு குறித்த பேரணி நடைபெற்றது.தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் மன்னார்குடி அருகே கூப்பாச்சிக் கோட்டை கிளை நூலகத்தில் வாசிப்பு முகாம் மற்றும் வாசிப்பு குறித்த பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.கண்ணகி தலைமை வகித்தார். வாசிப்பு முகாம் பற்றி மாவட்ட நூலகர் ஆண்டாள், கூத்தாநல்லூர் நூலகர் செல்வக்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பொன் முடி ஆகியோர் பேசினர்.பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நூல்கள் வழங்கபட்டு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவி நிலாணி நூல்கள் வாசிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற வாசிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு