டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்து டெய்லர் சாவு

திருச்சி, ஜூலை 24: திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவபிரகாசம் சாலையை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் டெய்லராக பணியில் இருந்தார். இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணாநகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து பார் ஊழியர் பிரவீன் என்பவர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.அங்கு சிகிச்ைச பலனின்றி சுரேஷ் இறந்தார். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: