திருச்சி, ஜூலை 24: திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச இசை பயிற்சி வகுப்பு ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளிடையே இசை ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச இசை பயிற்சி வகுப்பு துவக்க விழா எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளில் நடந்தது. இதில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியுடன், கூடுதல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் யோகா பயிற்சி, உடல் நலன் காக்க பேரிச்சம்பழம் மற்றும் ஆங்கில வாசிப்புதிறன் வளர்க்கும் வகையில் ஆங்கில வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.