×

இருளில் பொதுமக்கள் தவிப்பு ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் சைக்கிளில் கடலோர பாதுகாப்பு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

வேதாரண்யம், ஜூலை 24: வேதாரணயம் தாலுகா வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் தொடங்கி கோடியக்காடு கடற்கரை வரை கடலோர பாதுகாப்பு குறித்து கடலோர காவல் நிலைய போலீசார் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கு வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான் தலைமை வகித்தார். கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புப் பயிற்சி குறித்து மிதிவண்டியில் ரோந்து பயணம் மேற்கொண்டு மீனவர்களிடேயே பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்