×

சீர்காழியில் ரமேஷ் பாபு அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்

சீர்காழி, ஜூலை 24: சீர்காழி அருகே எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. அதிமுக பிரமுகரான இவர் கிருஷ்ணா குழும நிறுவன தலைவராகவும் இருந்து வந்தார். இவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரமேஷ்பாபு அறக்கட்டளை சீர்காழி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் தொழிலதிபர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயராஜமூர்த்தி தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்ததான முகாம் நடத்தினர். இதில் 54 பேர் ரத்தம் வழங்கினர். நிகழ்ச்சியில் அப்பாஸ் அலி, நலம் சுதாகர், பொறியாளர் வீரா, ராஜராஜன், பாபு, சரவணன் கலந்து கொண்டனர்.இதேபோல் சீர்காழி சங்கர் நகரில் நடந்த படத்திறப்பு விழாவில் டாக்டர் வாசுகி பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், பூராசாமி. பாஜக பிரமுகர் அகோரம், பாமக மாநில துணைப் பொது செயலாளர் பழனிச்சாமி, பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துதேவேந்திரன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி துணைத் தலைவர் ஏவிமணி, பாலதண்டாயுதம், கொடமுரட்டி சுரேஷ், நடிகர் செல்வபாரதி, குட்டிமணி, முத்துகுபேரன் மார்ஸ்பிரியன், பரணிதரன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இதேபோல் எடமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரமேஷ்பாபு அறக்கட்டளை சார்பில் ரூ.4 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்டி திறக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு 35 ஆயிரம் திருக்குறள் அகராதி வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிருஷ்ணா குழும நிர்வாகிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்