×

காரைக்கால் போலீசாருக்கு 3 நாள் யோகா பயிற்சி

காரைக்கால், ஜூலை 24: காரைக்கால் மாவட்ட காவல் துறையினருக்கு 3 நாள் யோகா பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது.காரைக்கால் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் அறிவுறுத்தியிருந்தார். அதன் ஒரு பகுதியாக, காவலர்களுக்கான 3 நாள் யோகா சிறப்பு பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது.இதில், காரைக்கால் - நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவல் வளாகத்தில் காலை 6 முதல் 7.30 மணி வரை யோகா பயிற்சி நடைபெற்றது. காரைக்காலை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஆனந்தன் பயிற்சி அளித்தார். வடக்கு மண்டல எஸ்.பி வீரவல்லபன், இந்திய ரிசர்வ் பட்டாலியன் உதவி கமாண்டன்ட் முத்துக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...