×

காவல் நிலையங்களில் சிபாரிசு இன்றி நேரடியாக புகார் தரலாம் கரூர் எஸ்பி அறிவிப்பு

கரூர், ஜூலை 24: சிபாரிசு இன்றி நேரடியாக காவல் நிலையங்களில்புகார் அளிக்கலாம் என எஸ்பி தெரிவித்துள்ளார்.கரூரு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் மனுதாரர், புகார்தாரர்கள் நேரடியாக காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகளை அணுகி மனு அளிக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கை எவ்வித பாரசட்சமுமின்றி சட்டப்படி உரிய முறையில் எடுக்கப்படும். மேலும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் தங்களின் சிபாரிசுக்காக முகவர்களையோ, முக்கியஸ்தர்களையோ, வேறு வெளி நபர்களையோ அழைத்து வரத்தேவையில்லை.பொதுமக்கள் தாங்கள் அளித்த புகாருக்கு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 89254 34332, 93446 13343 என்ற செல்பேசி எண்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு முறையிடலாம் என கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது