×

கழிவுகளை குப்பை தொட்டியில் போடாத 2 கடைகளுக்கு சீல்

புதுச்சேரி, ஜூலை 24:  உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள ெசய்திகுறிப்பு:
உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நடேசன் நகர் 100 அடி சாலையில் 2 கார் உபரி பாகங்கள் விற்கும் கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் பணி செய்பவர்கள், உபரிபாகங்களை சுற்றிவரும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் அதன் கழிவுகளை வெளியில் போடுவதால் சாலையோரங்கள் அசுத்தமாகவும், வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படுவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து, உழவர்கரை நகராட்சி அந்த இடத்தை ஆய்வு செய்து மேற்சொன்ன கழிவுகளை அகற்றி குப்பை தொட்டியில் போடுமாறு பலமுறை வாய்மொழியாக அறிவுறுத்தியும், முன்அறிவிப்பு செய்தும் கேட்கவில்லை. இதனால் நேற்று அந்த இடத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்து, அந்த கடைகளுக்கு ஆணையர் கந்தசாமி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், மேற்சொன்ன 2 கடைகளும் நகராட்சி உரிமம் பெறாமல் இதுவரை இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. எனவே, உழவர்கரை நகராட்சி எல்லை பகுதிகளில் வர்த்தகம் செய்யும் அனைவரும் நகராட்சியின் வர்த்தக உரிமம் கண்டிப்பாக பெற வேண்டும். சாலையை ஆக்கிரமிப்பு செய்யாமல் சாலையில் குப்பையை கொட்டாமல் தனியாக 2 குப்பை தொட்டிகள் வைத்து அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக சேகரிக்கவும். மேற்கண்டவாறு செய்யாவிட்டால் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 மற்றும திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன்படி நகராட்சியால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...