×

பிளஸ்1 மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு

புதுச்சேரி,  ஜூலை 24:  புதுவையில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து  வருகிறது. இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்ேவறு விழிப்புணர்வு  நிகழ்ச்சியை புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி, லப்போர்த் வீதியிலுள்ள திருவள்ளுவர் அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சேர்மன் ராஜேந்திரன்  தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் செல்வசுந்தரி முன்னிலை வகித்தார். இதில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு நிர்வாகிகளான பாலசுந்தரி, சுசிலி,  ஒதியஞ்சாலை எஸ்ஐ விஜயரங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளின்  பாதுகாப்பு, சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். குழந்தைகள் மீதான  பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு பெண் குழந்தைகளும்  தங்களை எந்தெந்த வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இதற்கான வழிமுறைகள்  என்னென்ன என்பது தொடர்பாகவும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இதில் பிளஸ்1  மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...