புதுச்சேரி, ஜூலை 24: புதுவை பாசிக் ஊழியர்கள் நிலுவை சம்பளம், ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஜூன் 26ம்தேதி முதல் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். பலகட்ட போராட்டம் நடத்தியும் அவர்களின் கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை. இந்நிலையில் 28வது நாளாக பாசிக் தலைமை அலுவலத்தில் நேற்று ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏஐடியுசி பொதுசெயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பாசிக் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு 55 மாத சம்பளத்தை கேட்டு கோஷமிட்டனர்.