×

செல்வமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம், ஜூலை 24: சிதம்பரம் நேதாஜி தெருவில் அமைந்துள்ளது செல்வமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தெருவடைச்சானில் அம்பாள் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மகா அபிஷேகம், தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டுதல், அக்னிசட்டி எடுத்தல், சோதனை கரகம், அலகு குத்துதல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதை தொடர்ந்து சிதம்பரம் பாலமன் வாய்க்காலில் இருந்து பூங்கரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதிஉலா காட்சியும் நடந்தது. தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு