×

சோழத்தரத்தில் சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

முஷ்ணம், ஜூலை 24: முஷ்ணம் அடுத்த சோழத்தரத்தில், மாவட்ட சொட்டுநீர் பாசன துணை இயக்குனர் ஆலோசனையின் பேரில் கீரப்பாளையம் ஒன்றிய தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கலைமணி தலைமையில், சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயண்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெறும் நோக்கில் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்துமாறும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுவதை பயன்படுத்துமாறும் விவசாயிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், தோட்ட கலை துறை உதவி அலுவலர்கள் கணேசன், சிவசண்முகம், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது