ஏர்வாடி அருகே மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலி

ஏர்வாடி, ஜூலை 24: ஏர்வாடி அடுத்துள்ள வேப்பன்குளம் வடக்கு தெரு மேலூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கட்டிட தொழிலாளியான இவருக்கும் அத்தை மகளான செல்லம்மாள்(28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. செல்லம்மாள் தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பிருந்த இரும்பு கம்பி கொடியில் துணிகளை காயப்போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்துபோது மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. உடனே அவரை வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், செல்லம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோவன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார். கர்ப்பிணி மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: