மானூர், ஜூலை 24: மானூர் அருகேயுள்ள களக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசுப்பு(27). திருமணமாகவில்லை. இவர் நெல்லையில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 20ம்தேதி இரவு 11.30 மணிக்கு சிவசுப்பு வேலை செய்யும் நிறுவனம் மூலம் திருச்செந்தூர் கோயில் செல்வதற்காக களக்குடியிலிருந்து தனது நண்பர் கார்த்திக் என்பவரும் பைக்கில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தார். நரியூத்து விலக்கு அருகே செல்லும் போது சாலையில் கிடந்த கல்லில் பைக் மோதி நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் சிவசுப்புக்கு தலை மற்றும் சில இடங்களில் பலத்தகாயம் ஏற்பட்டது. கார்த்திக்குக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திக் பைக்கில் சிவசுப்புவை அழைத்து வந்தார். வண்ணார்பேட்டை அருகே செல்லும் போது மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சிவசுப்பு உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.