அண்ணன் வீட்டில் ஆடு திருடிய தம்பி கைது

கடையம், ஜூலை 24: கடையம் அருகே உள்ள தேரிக்குடியிருப்பைச் சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் களஞ்சியம்(63). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்த களஞ்சியத்தின் தம்பி முறையான குருசாமி மகன் அரிச்சந்திரன்(54) ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆட்டுகுட்டிகளைத் திருடியுள்ளார். இதைப் பார்த்த களஞ்சியம் கையும் களவுமாகப் பிடித்து கடையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். களஞ்சியம் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்து அரிச்சந்திரனைக் கைது செய்தார்.

Related Stories: