கரிவலம்வந்தநல்லூர் அருகே கணவனை தாக்கிய மனைவி, கள்ளக்காதலன் கைது

சங்கரன்கோவில், ஜூலை 24: கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் இம்மானுவேல்(37). இவரது மனைவி மாரிச்செல்வி (26). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மாரிச்செல்வி அதே ஊரில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிச்செல்விக்கும் அதே ஊரை சேர்ந்த வேலுசாமி மகன் பழனிசாமி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கேரளா சென்று வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த இம்மானுவேல், மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிச்செல்வியும், அவரது கள்ளக்காதலன் பழனிசாமியும் சேர்ந்து இம்மானுவேலை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து இம்மானுவேல் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வியையும், பழனிசாமியையும் கைது செய்தனர். கைதான பழனிசாமிக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

Related Stories: