கோவில்பட்டியில் மத் கிருஷ்ண பாகவத ஸப்தாஹம் துவங்கியது

கோவில்பட்டி, ஜூலை 24: கோவில்பட்டியில் மத் கிருஷ்ண பாகவத ஸப்தாஹம் என்னும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது. கோவில்பட்டி கதிரேசன் கோவில்ரோட்டில் உள்ள கம்மவார் டிரஸ்ட் திருமண மண்டபத்தில் மத் கிருஷ்ண பாகவத ஸப்தாஹம் நேற்று (23ம் தேதி) துவங்கியது. மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடந்த இந்நிகழ்ச்சியில் கிருஷ்ண பரமாத்மாவின் திருஅவதாரம் குறித்து ரங்கம் சைலேச தயாபாத்திரம் ஆச்ரமம்  பரகால ஸ்வாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதே போல் வரும் 29ம் தேதி வரை  தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். 24ம் தேதி கோகுல லீலை, 25ம் தேதி பிருந்தாவன லீலை, 26ம் தேதி மதுரா லீலை, 27ம் தேதி குருசேஷத்ர லீலை, 28ம் தேதி துவாரகா லீலை, 29ம் தேதி  கிருஷ்ண பரமாத்மா பரமபதம் எழுந்தருளுதல் குறித்து ரங்கம் சைலேச தயாபாத்திரம் ஆச்ரமம்  பரகால ஸ்வாமி சிறப்புரையாற்றுகிறார்.  ஏற்பாடுகளை ரங்கம் மான் டிரஸ்ட் அமைப்பினர் செய்துள்ளனர்.

Related Stories: