×

கடைவீதி சென்ற வாலிபர் மாயம் வைகுண்டம்,

ஜூலை 24: வை குண்டத்தில் கடை வீதிக்கு சென்றபோது மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வைகுண்டம், சந்தையடித் தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் மணிகண்டன் (21). சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 9ம் தேதி காலை 6 மணிக்கு அருகேயுள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாயமான போது நீல நிறத்தில் பொடி கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், காவி நிறத்தில் வெள்ளை கோடு போட்ட சாரமும் அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள வைகுண்டம் போலீசார், வாலிபரை யாரேனும் பார்த்தால்  காவல் நிலையத்திற்கு அல்லது வைகுண்டம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு