×

பராமரிப்பு பணிக்காக ஆறுமுகநேரி ரயில்வே கேட் நாளை மூடல்

ஆறுமுகநேரி, ஜூலை 24: ஆறுமுகநேரியில் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக  நாளை (25ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுகிறது.  தூத்துக்குடி- திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆறுமுகநேரி ரயில்வே கேட்டை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.  இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக நாளை (25ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பு பலகை ரயில்வே சார்பில் கேட் அருகே நேற்று முன்தினம் முதல் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் மூடப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகக்கூடும் எனத்தெரிகிறது. எனவே, ரயில்வே கேட் மூடப்படும் காலை 8 மணி முதல் மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கினால் ஆறுமுகநேரி ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக காயல்பட்டினம் சென்றுவிடும்.   இதனால் ஆறுமுகநேரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்துசென்றுதான் பஸ்சில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பகல் வேளைக்குப் பதிலாக ரயில்வே கேட் பராமரிப்பு பணி இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு