பசுவந்தனை பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி

ஓட்டப்பிடாரம், ஜூலை 24: பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை சின்னப்பன்  எம்.எல்.ஏ. வழங்கினார். பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் நாயகம்  தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர்  குருசாமி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற  சின்னப்பன் எம்.எல்.ஏ., பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 134 பேருக்கு வழங்கினார். ஆசிரியர்  கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: