திருச்செந்தூர் அருகே மனைவியை அழைக்கவந்த வியாபாரி மீது தாக்குதல்

திருச்செந்தூர், ஜூலை 24:  தூத்துக்குடி  சின்னமணி நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் சுந்தர்சிங் (36). ஸ்பீக்கர் செட் கடை நடத்தி வரும் இவர், பந்தல்  கான்ட்ராக்ட் தொழிலிலும் செய்து வந்தார். இவருக்கும், வீரபாண்டியன்பட்டினம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் ஜான்சிராணி (30) என்பவருக்கும் கடந்த 11  ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த ஜான்சிராணி, வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம்  மனைவியை அழைக்கும்பொருட்டு சுந்தர்சிங் அங்கு சென்றபோது மாமனார்  ராமச்சந்திரனும், அவரது மகன் சக்திவேலும் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சுந்தர்சிங்கை கட்டையால் தாக்கினராம். இதில் காயமடைந்த சுந்தர்சிங் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த திருச்செந்தூர் எஸ்ஐ சுப்பிரமணியன், ஜான்சிராணி தந்தை மற்றும் தாய்  கலைச்செல்வி, தங்கை தனலட்சுமி, அவரது கணவர் ஜீவா ஆகிய 5 பேர் மீது வழக்குப்  பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: