சென்னை: வியாசர்பாடி அடுத்த எம்கேபி நகர் 3வது மெயின் ரோட்டில் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வியாசர்பாடி சின்னத்தம்பி தெருவை சேர்ந்த மாணவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. பிளஸ் 2 மாணவன் ேநற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல வெளியே வந்தபோது, பிளஸ் 1 படிக்கும் மாணவன், சக மாணவர்கள் 10 பேருடன் சேர்ந்து பிளஸ் 2 பயிலும் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் பிளஸ்2 மாணவனை சரமாரியாக குத்தியுள்ளனர்.